பிலிப்பீன்ஸில் மே 10ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்று அதிபர் குளோரியா அர்ரோயோவின் பேச்சாளர் புதன் கிழமை தெரிவித்தார்.
வாக்குகளை எண்ணும் சாதனங்களில் தொழில் நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
“தேர்தல் தேதியைவிட தானியக்கச் சாதனம் சிறப்பாகச் செயல்படுவதே முக்கியம் என்று நினைக் கிறேன்” என்று பேச்சாளர் கேரி ஒலிவார் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
வாக்குகளை எண்ணும் 76,000க்கும் மேற்பட்ட சாதனங்களின் கணினி சில்லுகள் மாற்றப் படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் முன்தினம் அறிவித்தது. திங்கட்கிழமை நடத்தப்பட்ட இறுதிக்கட்டச் சோதனையின் போதுதான் கணினி சில்லுகளில் இருந்த கோளாறு தெரிய வந்தது.
இந்தக் கோளாறால், வாக்குச்சீட்டுகளிலுள்ள வாக்காளர் பெயர்களைச் சாதனத்தால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் என்று அதிபரின் பேச்சாளர் கூறிய போதிலும், தேர்தலுக்கு முன்பாக சரியாகிவிடும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment