அணுவாயுதம் தொடர்பில் ஆறு நாடுகள் நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வட கொரியா தயாராக உள்ளது என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் இல் கூறியுள்ளார்.சீனா சென்றுள்ள கிம், சீன அதிபர் ஹு ஜின்டாவிடம் இவ்வாறு கூறியதாக தகவல் சாதனங்கள் கூறின.
சீன அதிபருடன் கிம் நான்கு மணி நேரம் பேசியதாகவும் அப்போது கிம் இந்த உறுதியை அளித்ததாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம் கூறியது. 68 வயதாகும் கிம் திங்கட்கிழமை சீனா வந்து சேர்ந்தார். கிம்மின் இந்த சீன வருகையின்போது, அணுவாயுதப் பேச்சில் வட கொரியா கலந்து கொள்வதுபற்றி அவர் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வட கொரியத் தலைவர் நேற்று சீனப் பிரதமர் வென் ஜியாவ்பாவ், துணை அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பொருளியல் ஒத்துழைப்பு குறித்து கிம் சீனத் தலைவர்களுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment